திட்டக்குடி, ஜன. 9: திட்டக்குடியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ஏடிஎம்மை திருடி பணம் எடுத்த வாலிபர் கைது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி நர்மதா (21). இவர் சம்பவத்தன்று திட்டக்குடி பெரியார் தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்கச் சொல்லி ரகசிய எண்ணையும் கூறியுள்ளார். தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்த அந்த மர்மநபர் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு அதேபோல் வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் நர்மதா செல்போன் எண்ணிற்கு அவரது வங்கி கணக்கில் இருந்து 13 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நர்மதா தனது ஏடிஎம் கார்டை எடுத்து பார்த்தபோது அது போலி ஏடிஎம் கார்டு என தெரியவந்தது.