கங்கனாங்குளத்தில் சேரன்மகாதேவி ஒன்றிய பஞ். தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

வீரவநல்லூர்,ஜன.9: சேரன்மகாதேவி ஒன்றியத்துக்குட்பட்ட 12 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் தேர்ந்தெடுக்கும் கூட்டம் கங்கனாங்குளத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முத்துபாண்டி பிரபு தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், உதவி திட்ட அலுவலர் மணவாளசங்கரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், பொன்னுலெட்சுமி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேரன்மகாதேவி ஒன்றியத்திற்குட்பட்ட 12 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராக திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்து தலைவர் இளையபெருமாள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத்தலைவராக தெற்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் உஷா துரை, செயலாளராக வடக்கு காருகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளராக மூலச்சி பஞ்சாயத்து தலைவி சமுத்திரகனி குருநாதன், பொருளாளராக கரிசல்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெரால்டு மாணிக்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சேரன்மகாதேவி பணிமனை தொ.மு.ச. செயலாளர் கணேசன், நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், கரிசல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார டாக்டர் ரமேஷ், சுகாதார செயலாளர் முருகன், உதவி பொறியாளர் பாக்கியராஜ், ஒன்றிய இளைஞரணி சீவலமுத்து குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ராணி, கனகமணி, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உலகன்குளம் மோகன், கூனியூர் முத்துகிருஷ்ணன், மலையான்குளம் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: