கோவில்பட்டி, ஜன. 9: கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை அமைப்பது குறித்து கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் உள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகள் மேடு, பள்ளமாக உள்ளதால் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை அமைக்க வேண்டிய இடங்களை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவமனை வளாகத்தில் பேவர் பிளாக் அல்லது சிமென்ட் சாலை அமைத்து தரப்படும் என்றார்.