செந்துறை,ஜன.9: செந்துறை வட்டார நெல் விவசாயிகளை நெல் தரிசு வயலில் பயறு வகை பயிர்களை பயிரிட்டு அதிக லாபம் அடைந்திட வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜென்சி கேட்டுக்கொண்டுள்ளார்.நெல் சம்பா அறுவடைக்கு பிறகு பயறு வகை பயிர்களான உளுந்து, துவரை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை ஆகிய பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை பயறுவகை சாகுபடி செய்தால் மண்ணின் வளம் மேம்படும், மனிதனின் புரத தேவைக்கு உற்பத்தி, மண் வளம் உயர்வு குறைந்த நாளில் குறைந்த நீரில் அதிக வருவாய் போன்றவை பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதால் கிடைக்கிறது.