ஆவடி: அம்பத்தூர் அடுத்த பாடி, தேவர் நகரில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகள் இருக்கிறாள். முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறாள். நேற்று முன்தினம் சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து பெற்றோர், அவரை சென்னை அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இதற்கிடையில், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரித்தார்.