பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் அரிசியை, சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, அதை பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்துவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, திருத்தணி டிஎஸ்பி சாய்பிரினித் தலைமையில், உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி, பொதட்டூர்பேட்டை அடுத்த எஸ்கேஆர் பேட்டையில் தீவிர சோதனை நடத்தினார்.