குடியாத்தம், ஜன.8: தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து, உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. ஒமிக்ரான் தாக்கம் யர்ந்து கொண்டிருப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி ேநற்று முன்தினம், பேரணாம்பட்டு வி.கோட்டா ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி, குடியாத்தம் அடுத்த பல்லகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேல்பட்டி மருத்துவ குழுவினர் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தினர். இந்த முகாம் ஏற்பாடுகளை பேரணாம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி செய்திருந்தார்.