வேலூர், ஜன.8: வேலூரில் நெடுஞ்சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். வேலூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருக்கும் சாலைகளையும் ஆக்கிரமித்து சிலர் கடைகளை வைத்து வியாபாரம் மேற்கொள்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து தோட்டப்பாளையம் வரை சாலை ஓரத்தில் சிலர் பங்க் கடைகள், தரைக்கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.