அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளையொட்டி பழநி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

பழநி, ஜன. 8: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளையொட்டி பழநி கோயிலில் கட்சியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். திமுக மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கட்சியினரால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கட்சி கொடியேற்றுதல், அன்னதானம், இனிப்பு வழங்குதல், ரத்ததானம் செய்தல், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல் போன்ற நலத்திட்ட உதவிகள் திமுகவினரால் வழங்கப்பட்டன.

 இந்நிலையில் அமைச்சர் குடும்பத்தினர் பழநி கோயிலில் நேற்று முன்தினம் இரவு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். அமைச்சர் ஐ.பெரியாசமியின் மகனும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமாரின் மனைவி மெர்சி, மகன் ஆதவன், மகள் ஓவியா உள்ளிட்டோர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தமிழ்மணி, முன்னாள் நகராட்சித் தலைவர் உமாமகேஷ்வரி, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் இந்திரா, நகர துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் விஜயமுருகன், அழகேசன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகர நெசவாளரணி அமைப்பாளர் பாஸ்கரன், நகர பொறியாளரணி அமைப்பாளர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: