திருப்பூர், ஜன. 8: உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வினீத் தலைமையில் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை முன்னிலை வகித்தார். இதில், பல்வேறு துறை அலுவலர்கள், ஓட்டல், உணவு பொருள் உற்பத்தி நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அனைத்து ஓட்டல், பேக்கரி, மளிகை மற்றும் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் உரிய வகையில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று இயங்க வேண்டும். பில்களில் உரிம எண் குறிப்பிட வேண்டும். தேங்காய் எண்ணெய்யில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சல்பர் பயன்படுத்தக்கூடாது.