குழித்துறை அருகே லாட்ஜில் விபசாரம் 3 பேர் கைது

களியக்காவிளை,ஜன.8: குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் தனியார் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜில் விபசாரம் நடப்பதாக எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை எஸ்ஐ மகேஸ்வரராஜ் தலைமையிலான போலீசார் கழுவன்திட்டை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ராஜஸ்தான், திருவனந்தபுரம், தூத்துக்குடி மற்றும் பிலாவிளை பகுதிகளை சேர்ந்த நான்கு இளம்பெண்களும், வெட்டுமணியை சேர்ந்த தேவபிரசாத்(56), பத்துகாணியை சேர்ந்த ஜெயக்குமார் (36), மாங்கோடு பகுதியை சேர்ந்த வினில் ஆகிய 3 பேரும் இருந்தது தெரியவந்தது. மூன்று ஆண்களையும் களியக்காவிளை போலீசாரிடமும்,  நான்கு பெண்களை மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்திலும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து 3 ஆண்கள் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 4 பெண்களை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: