குளச்சல் அருகே மீனவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

குளச்சல்,ஜன. 8 : குளச்சல்  அருகே கொட்டில்பாடு ஒனாரிஸ் காலனியை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ்(40). மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 5ம்தேதி இரவு மீன்  பிடிக்க கடலுக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சகாய ரூபி மற்றும்  2 குழந்தைகளும் படுத்து தூங்கினர். நேற்று முன்தினம் காலை பார்க்கும் போது பீரோ திறந்து கிடந்ததைக்கண்டு சகாய ரூபி அதிர்ச்சியடைந்தார்.

 வளையல்,  மோதிரம், கம்மல் உள்பட 33 கிராம் நகை வைக்கப்பட்டிருந்த பர்ஸ்  சிதறி கிடந்தது. அதிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கம் ₹7 ஆயிரத்தை  காணவில்லை. இரவில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவை திறந்து பீரோவில்  இருந்த நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சகாய ரூபி  குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: