சின்னமாவடிகுளத்தில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்

திருவெறும்பூர், ஜன.6: திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்னமாவடிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் காவல்துறை உதவியுடன் 2வது நாளாக நேற்று அகற்றி முடித்தனர். திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்னமாவடிகுளத்தில் 19 ஏக்கரில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டியிருந்த வீடுகளை வருவாய்த்துறையினர் காவல்துறை உதவியுடன் பொக்லைன் கொண்டு நேற்று முன்தினம் இடித்து அப்புறப்படுத்தியபோது ஜார்ஜ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு நேற்று காலை 8 மணி வரை அவகாசம் கோரியிருந்தார். அதன் பேரில் அவருக்கு திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் வீட்டிலுள்ள பொருட்களை அப்புறப்படுத்திக் கொள்ள நேற்று காலை வரை அவகாசம் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஜார்ஜும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்திய நிலையில் பொக்லைன் உதவியுடன் நேற்று 2வது நாளாக ஜார்ஜ் வீட்டை இடித்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Related Stories: