கிருஷ்ணகிரி, ஜன.3: பர்கூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மதியழகன் எம்எல்ஏ., துவக்கி வைத்தார். பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட கோதியழனூர் கிராமத்தில், திமுகவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் முகாம் நடந்தது. பர்கூர் மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சி தொடர, திமுகவில் இளைஞர்கள இணைய வேண்டும்,’ என்றார்.