கிருஷ்ணகிரி, ஜன.3: கிருஷ்ணகிரியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை பயின்று வரும் மாணவிகள் அபிதா, அஞ்சிமா, ஷாஜூ, பாரதி, தேவதர்ஷினி, தேவ்சேனா, ஹரிணிஜெயா, ஆஜிரா, இந்திராணி, ஜீவிதா, வர்ஷா மற்றும் வெண்மதி ஆகிய 11 பேர் கிருஷ்ணகிரி அடுத்த மலைசந்து கிராமத்தில் பட்டறிவு பயணமாக 75 நாட்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.