திருப்பூர் அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம்

திருப்பூர், ஜன.3:  தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கே. செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னிமலை சென்டக்ஸ் அருகில் உள்ள கௌரி திருமண மண்டபத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம், 11:30 மணிக்கு குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ருத்ராவதி பேரூராட்சி ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, மதியம் 1:30 மணிக்கு பல்லடம் அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு பல்லடம் திருச்சி சாலை மணிவேல் மஹாலில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.

Related Stories: