முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் தொழிலாளியை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு

திருப்பூர், ஜன. 3: உத்தரபிரதேசம்  மாநிலத்தை சேர்ந்த ராகுல் (21), இவர் திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில்  தனது நண்பர்களுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் செல்போனில் படம் பார்த்து  கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள், முகமூடி அணிந்து  கொண்டு ராகுலின் வீட்டிற்குள் சென்று அவருடைய செல்போனை பறித்துள்ளனர்.  ராகுல் செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் அந்த மர்மநபர்கள் மறைத்து  வைத்திருந்த கத்தியால் ராகுலில் வயிற்று பகுதியில் குத்தி அவரது செல்போனை  பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த ராகுலின் நண்பர்கள் அவரை  மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளனர்.  இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து  அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: