திருப்பூர், ஜன. 3: உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் (21), இவர் திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள், முகமூடி அணிந்து கொண்டு ராகுலின் வீட்டிற்குள் சென்று அவருடைய செல்போனை பறித்துள்ளனர். ராகுல் செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் அந்த மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுலில் வயிற்று பகுதியில் குத்தி அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர்.