×

காங்கயம் அருகே பைக் மீது வேன் மோதி தொழிலாளி பலி

திருப்பூர், ஜன.3: காங்கயத்தை அடுத்துள்ள கீரனூர் மொரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலி தொழிலாளி. இவர், கடந்த 30ம் தேதி இரவு தனது பைக்கில் காங்கயத்தில் இருந்து திருப்பூர் சிவன்மலை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருப்பூரில் இருந்து காங்கயம் நோக்கி வந்த வேன், செல்வராஜ் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Kangayam ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...