பூட்டிய வீட்டில் தீ விபத்து

கூடலூர், ஜன.3:  கூடலூர் அருகே பூட்டிய வீட்டில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூரை அடுத்த கல்லிங்கரை பகுதி பாவனா நகரில் வசிப்பவர் பெஞ்சமின். ஆசிரியராக பணிபுரியும் இவர், நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். மாலை வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த பொதுமக்கள் தேவர்சோலை காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினரும் வீட்டினுள் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறையை பகுதிகளில் பரவி பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: