கூடலூர், ஜன.3: கூடலூர் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வீடுகள் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை தெருக்களில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர் பகுதிகளில் சேகரமாகும் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக நவீன புதுமையான தொழில்நுட்ப ஆலோசனைகளை செயலாக்க திட்ட அறிக்கையாக நகராட்சி அலுவலகத்துக்கு வழங்கலாம்.