மருந்துக்கடை உரிமையாளர் பள்ளத்தில் விழுந்து பலி

பவானி, ஜன. 3: பவானி அருகேயுள்ள மயிலம்பாடி, கொண்டுரெட்டிபாளையம், அம்மன் கோயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பூபதி (36). இவர், மயிலம்பாடி பஸ் நிறுத்தம் அருகே மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.  ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகளவில் மது அருந்திய பூபதி, குடிபோதையில் பைக்கில் சென்றவர் கொண்டுரெட்டிபாளையம் அருகே பள்ளத்தில் விழுந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த உறவினர்கள் பூபதியை மீட்டு, வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கே மயங்கிய நிலையில் காணப்பட்டதால் பவானி அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர்.  மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது பூபதி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: