33 பேருக்கு கொரோனா

ஈரோடு, ஜன. 3: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 821 ஆக உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 33 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 689 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை 711 ஆக உள்ளது

Related Stories: