சின்னாளபட்டி, ஜன. 1: ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சியில் உள்ள கும்மம்பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை (64), மாற்றுத்திறனாளி. இவர், தனக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசனிடம் நேற்று கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட ஒன்றிய பெருந்தலைவர், இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் தெரிவித்தார். அப்போது, ஒன்றிய துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காங்கேயம் செல்வி, பாப்பாத்தி, நாகவள்ளி, அழகு சரவணக்குமார், காணிக்கைசாமி உட்பட ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.