ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆதரவற்ற 120 பேருக்கு முடி திருத்தம்

திருமுருகன்பூண்டி, ஜன. 1:  உலக மாசற்ற குழந்தைகள் தினம் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில், சாலையோரம் ஆதரவற்று சுற்றி திரிந்தவர்களுக்கு இலவச முடி திருத்தம் மற்றும்  தூய்மை பணிவிடை சேவைப் பணி நடந்தது. திருப்பூரில் பல பகுதிகளில் ஆதரவற்ற நிலையிலும் சுற்றித் திரிந்த நபர்களுக்கு முடி திருத்தம் செய்தும், சிலருக்கு மொட்டை அடித்தும், பின்னர் குளிக்க வைத்து, புதிய மாற்று உடை வழங்கியதுடன் ஒரு வேளைக்கான உணவு பொட்டலமும் வழங்கப்பட்டது. இதில் 5 குழந்தைகள் உள்பட 120 பேருக்கு இந்த முடி திருத்தும் சேவையை  நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ், செயலாளர் சிவகாமி, மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்தனர்.

Related Stories: