திருப்பூர், ஜன. 1: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :திருப்பூர் மாவட்டத்தில் 17-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 18 லட்சத்து 47 ஆயிரத்து 861 பேருக்கு முதல் தவணையும், 12 லட்சத்து 5 ஆயிரத்து 165 பேருக்கு 2வது தவணையும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சத்து 47 ஆயிரத்து 439 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து 69 ஆயிரத்து 834 பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. 17&வது கட்ட தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.