மாடு திருடிய வாலிபர் கைது

அரூர், டிச.23: அரூர் அருகே கொங்கவேம்பு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, விவசாயி. இவர் 7 மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 20ம் தேதி மாலை, விவசாய நிலத்தில் 7 மாடுகளை கட்டியுள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்த போது, ஒரு மாட்டை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் எஸ்.பட்டியை சேர்ந்த ரகுநாத் (25) என்பவரை மாடு திருடிய வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது தோட்டத்தில் இருந்த 100லிட்டர் சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை கொட்டி அழித்தனர்.

Related Stories: