டூவீலர் மீது லாரி மோதி மின்வாரிய அதிகாரி பலி

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.23: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாப்பட்டியை சேர்ந்தவர் விஜயன்(47). இவர், பொம்மிடி அருகே பையர்நத்தம் மின்சார துறை அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சாமியாபுரம் கூட்டுரோடு அருகே வந்த போது, எதிரே வந்த லாரி மோதியதில் விஜயன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்குன்றனர்.

Related Stories: