தபால் தொடர்பான

குறைதீர் கூட்டம்தர்மபுரி, டிச.9: தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: தர்மபுரி அஞ்சல் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டம், வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு, தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தபால்துறை தொடர்பான புகார்கள் இருப்பின், வாடிக்கையாளர்கள் தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, வரும் 15ம் தேதிக்குள் புகார் மனுக்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில்

கூறப்பட்டுள்ளது.

Related Stories: