வாலிபர் திடீர் சாவு

கிருஷ்ணகிரி, டிச.9: கிருஷ்ணகிரி அடுத்த பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகேயுள்ள கே.ஏ.தர்கா நகர் பகுதியில் கார்த்திக் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார்த்திக்கின் அக்கா சத்யா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: