வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு

தேன்கனிக்கோட்டை, டிச.9: தேன்கனிக்கோட்டை நவ்ரோஜி தெருவில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதே வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளது. நேற்று பள்ளி வகுப்பறைக்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இதையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் வந்து பார்த்தபோது பாம்பு சிக்கவில்லை. பள்ளி வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளதால், வகுப்பறைக்குள் பாம்பு புகுந்து விட்டதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர் குற்றம்சாட்டினர். எனவே, முட்புதர்களை விரைந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: