ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

தேன்கனிக்கோட்டை, டிச.9:தேன்கனிக்கோட்டை அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கெம்பன்(33). ரவுடியான இவர் கடந்த மாதம் 20ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மாரச்சந்திரத்தை சேர்ந்த மகேஷ்குமார்(34), தேர்ப்பேட்டையை சேர்ந்த சிவா(32) ஆகிய இருவர் ஓசூர் நீதிமன்றத்திலும், திப்பன்னூரை சேர்ந்த வெங்கடேஷ்(22), தேன்கனிக்கோட்டை கீழ்கோட்டையை சேர்ந்த மணிகண்டன்(29), டி.கொத்தனூரை சேர்ந்த முனிராஜ்(23), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன்(22) ஆகிய 4 பேர் சேலம் நீதிமன்றத்திலும், மாரச்சந்திரத்தை சேர்ந்த ராஜ்குமார்(29), லோகேஸ்(24) ஆகிய இருவர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக மாரச்சந்திரத்தை சேர்ந்த ரவுடி மகேஷ்குமாரின் அண்ணன் கணேஷ்(37) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: