கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, டிச.9: பெங்களூரு அருகே நந்திமலை, தென்பெண்ணை ஆற்றின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் 428 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 508 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதே அளவு நீர் அணையில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் 804 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 934 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 869 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 51.10 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Related Stories: