வீட்டிற்குள் அழுகிய நிலையில் கறிக்கடைக்காரர் உடல் மீட்பு

திருச்சி, டிச. 9: திருச்சி ோட்டை கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(50). இவர் காந்தி மார்க்கெட் இறைச்சி மார்க்கெட்டில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மனைவி மற்றும் குழந்தைகள் கீரனூர் அருகே உள்ள பள்ளப்பட்டிக்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த செல்வகுமார், கடந்த 5ம் தேதி வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றவர் அதன்பின் வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் கோட்டை போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை நடத்தினர். இதில் செல்வகுமார் உடல் வீங்கி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: