கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், டிச.9: கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோல் இதற்கு சிகிச்சை பலனின்றி பலியாகவும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் பலியானவர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம் அவரது வாரிசுதாரர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பலியானவர்களுக்கு நிவாரணத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதனை பெற பலரும் வந்தனர். கொரோனாவால் பலியானவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் உறவினர்கள் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இந்த பணிகளை தாசில்தார் ஜெகநாதன் கண்காணித்தார்.

Related Stories: