வெளிநாட்டில் இருந்து திருப்பூருக்கு வந்த 4 பேருக்கு மருத்துவ கண்காணிப்பு
திருப்பூர், டிச.9: திருப்பூர் மாவட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், ஓமிக்ரான் வைரஸ் வெளிநாடுகளில் அதிகம் பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் விபரங்களை சேகரித்து அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இந்து 4 பேர் திருப்பூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீடுகளில் தங்கவைத்து தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதி சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.