ஈரோடு, டிச. 9: ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதேபகுதியை சேர்ந்த கணேசன் (57) என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சத்தி குள்ளன் கரடு காலனியில் மது விற்றதாக அதேபகுதியை சேர்ந்த கருப்புசாமி (40) என்பவரையும், சித்தோடு மூலப்பாளையம் பால் சொசைட்டி பின்புறம் மது விற்றதாக எலவமலை சென்னநாயக்கனூரை சேர்ந்த தங்கராசு (30) என்பவர் உட்பட 2 பேரை கைது செய்து, 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.