ஏலம் ஒத்திவைப்பு

கம்பம், டிச. 9: கம்பம் ஒன்றியத்தில் உள்ளது ஆங்கூர்பாளையம் ஊராட்சி. இங்கு கம்பம் செல்லும் சாலையில் 96 புளிய மரங்கள், சிக்காலி குளம் பகுதியில் 86 புளிய மரங்கள் உள்ளன. நடப்பாண்டில் புளிய மரங்களின் மேல், பலன் மகசூலை மட்டும் அனுபவித்துக் கொள்ள, நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது. கடந்தாண்டில் ரூ.96 ஆயிரம் மற்றும் ரூ.46 ஆயிரமும் ஏலம் போனது. தற்போது, அதைவிட குறைவாக ஏலம் கேட்கப்பட்டது. இதனால், ஏலத்தை மறுதேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பதாக ஊராட்சி தலைவர் சாந்தி பரமன் தெரிவித்தார். உடன் துணைத்தலைவர் தினகரன் இருந்தார்.

Related Stories: