களை எடுக்கும் பணி தீவிரம் பெரியாண்டாங்கோவில் பகுதியில் சாலையில் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், டிச. 9: கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை விரைந்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.கரூர் மதுரை பைபாஸ் சாலை பகுதியில் உள்ள பெரியார் வளைவு பாதையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பெரியாண்டாங்கோயில் பகுதிக்கான சாலை உள்ளது. கரூர் நகரப்பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையின் வழியாக செல்கின்றன. வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் இந்த பகுதியில் உள்ளன.

இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக சாலையோரம் மெகா பள்ளம் ஏற்பட்டதோடு, பல்வேறு பகுதிகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பள்ளம் ஏற்படாத வகையில் முட்கள் வைத்து பாதுகாக்கப்பட்டாலும், மேலும் பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த பிரச்னையை விரைந்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: