மயிலாடுதுறை நகரில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுபடி குளம் ஆக்கிரமிப்பு அகற்றம் துவக்கம்

மயிலாடுதுறை, டிச.9: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி மயிலாடுதுறையில் நீர்நிலை ஆக்ரமிப்புகள் அகற்றம் குளக்கரையில் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 5,360 சதுரஅடி ஆக்ரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.மயிலாடுதுறையில் காவிரி ஆறு, பழங்காவிரி வாய்க்கால் மற்றும் குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி, புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சட்ட ஆலோசகர் விஜயகுமார் என்பவர் 2017ம் ஆண்டு சென்னை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில், இந்த ஆக்ரமிப்புகளை அகற்றி 22.12.2021ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய செய்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனைத் தொடாந்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நேற்று மயிலாடுதுறை திருமஞ்சனவீதியில் உள்ள இரட்டைக் குளத்தின் 24500 சதுர அடி பரப்பு கொண்ட மேல குளத்தின் கரை ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.

 தனியார் நபர் 3 பேரால் சுவர் மற்றும் வேலி வைத்து 5,360 சதுரஅடியில் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் பாதுகாப்புடன் ஆக்ரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகரில் 124 குளங்கள் இருந்தது, தற்பொழுது நகராட்சி கணக்கில் 83 குளங்கள் மட்டுமே காண்பிக்கின்றனர். அதிலும் 20க்கும் மேற்பட்ட குளங்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட குளங்கள் பகுதியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளங்கள் தூர்க்கப்பட்டும், குடியிருப்பு மனைகளாக மாற்றப்பட்டும், கட்டிடங்களாக மாறியும், பாதாள சாக்கடைக்கான கழிவுநீரேற்ற நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன, நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று குழப்பத்தில் இருக்கிறது. முழுமையாக குளங்களின் ஆக்கிரமிப்பு அகற்றப்படவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: