மயிலாடுதுறை, டிச.9: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி மயிலாடுதுறையில் நீர்நிலை ஆக்ரமிப்புகள் அகற்றம் குளக்கரையில் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 5,360 சதுரஅடி ஆக்ரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.மயிலாடுதுறையில் காவிரி ஆறு, பழங்காவிரி வாய்க்கால் மற்றும் குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி, புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சட்ட ஆலோசகர் விஜயகுமார் என்பவர் 2017ம் ஆண்டு சென்னை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில், இந்த ஆக்ரமிப்புகளை அகற்றி 22.12.2021ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய செய்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனைத் தொடாந்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நேற்று மயிலாடுதுறை திருமஞ்சனவீதியில் உள்ள இரட்டைக் குளத்தின் 24500 சதுர அடி பரப்பு கொண்ட மேல குளத்தின் கரை ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.