சீர்காழியில் கொடிநாள் பேரணி

சீர்காழி, டிச.9: சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கொடி நாள் பேரணி நடைபெற்றது. சீர்காழி ஆர்டிஓ நாராயணன் தலைமை வகித்தார். சீர்காழி டிஎஸ்பி லாமேக், தாசில்தார் சண்முகம், இன்ஸ்பெக்டர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ நாராயணன் கொடிநாள் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் சீர்காழி பெஸ்ட் மேல் நிலைப்பள்ளி, விவேகானந்தா மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் சீர்காழி மண்டல துணை தாசில்தார்கள் ரவிச்சந்திரன், விஜயராணி வருவாய் ஆய்வாளர் பொன்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: