பெண்களை வம்புக்கிழுத்து தாக்கிய வாலிபர் கைது

காரைக்கால், டிச.9: காரைக்கால் நிரவி சாந்தி நகர் 2-வது குறுக்கு தெரு சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி கஸ்தூரி (40). இவரது எதிர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ஐயப்பன் (41) இவருக்கும் எதிர் வீட்டிலிருக்கும் கஸ்தூரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐயப்பனை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். கஸ்தூரியின் தூண்டுதலாலேயே வீட்டு உரிமையாளர் வீட்டை காலிசெய்ய சொல்வதாக எண்ணிய ஐயப்பன், எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கஸ்தூரியிடம் வலியச் சென்று வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஐயப்பன், எதிர் வீட்டு கஸ்தூரியையும் அவரது மகளையும் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கஸ்தூரி மற்றும் அவரது மகள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிரவி போலீசார் ஐயப்பனை கைது செய்தனர்.

Related Stories: