பழநி, டிச. 8:ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், பழநியில் பல வீடுகள் விடுதிகளாக மாறி வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.கார்த்திகை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை பழநி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சீசன், பொங்கல் பண்டிகை விடுமுறை காலம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை தினங்கள் போன்று தொடர்ச்சியாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகையை பயன்படுத்தி பழநி அடிவார பகுதியில் உள்ள பல வீடுகள் தற்போது விடுதிகளாக முகம்மாறி உள்ளன. சந்து பொந்துகளில் உள்ள தங்களது இருப்பிடத்திற்கு பழநிக்கு வரும் பக்தர்களை புரோக்கர்கள் மூலம் அழைத்து சென்று விடுகின்றனர். அங்கு போதிய வசதிகள் இருப்பதில்லை என்றும், வாடகைகள் சொல்வதொன்றும், வசூலிப்பது ஒன்றாகவும் இருப்பதாகவும் பல பக்தர்கள் புகார் தெரிகின்றனர்.