மேலூர், டிச. 8: மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் மற்றும் பான்மசாலா விற்பனை செய்த 2 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலூர் அருகே நயித்தான்பட்டியில் வீட்டின் அருகே மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த, முத்தையா மகன் செல்லமுத்து(55), கீழவளவு உள்ள டீக்கடையில் மது விற்பனை செய்த மழுவேந்தி மகன் சேவற்கொடியோன்(45) ஆகியோரை கைது செய்த கீழவளவு போலீசார் இவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.