மாவட்டம் முழுவதும் 220 இடங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், டிச.8: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு தொடர்பாக 220 முகாம் நடத்தப்பட உள்ளன என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.கால்நடை பராமரிப்புத் துறையில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திட்டத்தின் கீழ் டிசம்பர்-2021 முதல் மார்ச் 2021க்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம் வீதம் 220 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கிராமங்களில் நடத்தப்படவுள்ள கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழுநீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள், கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு, நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள், கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புக்கலவை இலவசமாக வழங்கப்படும். சிறந்த முறையில் கலப்பின கிடேரி கன்றுகளை வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் இம்முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Related Stories: