விருதுநகர், டிச. 8: விருது நகர்- டி.கல்லுப்பட்டி ரோட்டில் சிவஞானபுரம் விலக்கு அருகே ஆமத்தூர் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூ வீலரை நிறுத்தி சோத னை செய்த போது, பெட்டியில் 200 கிராம் கஞ்சா இருந்த தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டூ வீலரில் வந்த அபுபக்கர்(56), ஆண்டவர்(29), பெரியமொட்டை சாமி(49) யை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.