பவானி, நவ 8: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ளது குறிச்சி. இங்குள்ள செம்படாபாளையம், சோலையப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முருகேசன் (35). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி சுந்தராம்பாள் (30). கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். முருகேசனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. சம்பாதிக்கும் பணத்தை குடித்தே செலவு செய்து வந்தார். இதனால் சுந்தராம்பாள் குடும்பம் நடத்த சிரமப்பட்டார். முருகேசன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 26ம் தேதி அன்றும் வழக்கம்போல் முருகேசன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் விரக்தியடைந்த முருகேசன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பெரும் போராட்டத்திற்கு பின்னர் முருகேசன் உயிர் பிழைத்தார். பின்னர் சிகிச்சை முடிந்து கணவரை சந்தராம்பாள் வீட்டுக்கு அழைத்து வந்தார். மனைவி மற்றும் உறவினர்கள் முருகேசனுக்கு அறிவுரை வழங்கினர். ஒரு சில நாட்கள் முருகேசன் குடிக்காமல் இருந்தார்.