திருப்பூர், டிச. 8: திருப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் குருவாயூரப்பன் நகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக திருப்பூர் வடக்குஅனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல்
கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது குருவாயூரப்பன்முதல் வீதியில் உள்ள ஒரு காம்பவுண்டில் சோதனை நடத்தினர்.