2ம் நிலை நிலை காவலர் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

தூத்துக்குடி, டிச. 8: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2020-21ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த 2ம் நிலை நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 85 பெண்கள், 225 ஆண்கள் என மொத்தம் 310 பேர் தேர்வாகினர். அவர்களுக்கு நேற்று  தனிவிரல் ரேகை பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி எஸ்பி  ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில் ‘‘காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற நீங்கள் தேர்வாகியுள்ளீர்கள். நீங்கள் தேர்வு எழுதுவதற்கு வழங்கிய சான்றிதழ் அனைத்தும் சரிபார்க்கபடும், மேலும் உங்கள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, உங்கள் மீது குற்ற வழக்குகள் இல்லை  என்பதை உறுதி செய்யப்பட்ட பிறகு நீங்கள் காவல்துறைக்கு பணியாற்ற தகுதி பெறுவீர்கள். மேலும் வருங்காலங்களில் காவல்துறையில் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில்  தனி விரல் ரேகை பதிவு கூட எஸ்ஐக்கள் முருகேஸ்வரி, வைஜெயந்தி மாலா, போக்குவரத்து எஸ்ஐ வெங்கடேஷ், தென்பாகம் எஸ்ஐ  உதயலட்சுமி, பங்கேற்றனர்.

Related Stories: