புதுக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகம்

புதுக்கோட்டை, டிச.8:தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் 3230 சதுர அடியில் சுமார் ரூ.93.26 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர்  அலுவலகத்தினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி  காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதிய  சார்பதிவாளர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் குத்து விளக்கேற்றி  வைத்து, அவ்வளாகத்தில் மரக்கன்று நட்டினார். நிகழ்ச்சியில் நெல்லை பதிவு மன்ற துணைப்பதிவு தலைவர் ஆறுமுகம், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் பால்பாண்டி, தணிக்கை மாவட்ட பதிவாளர் நூர்ஜஹான், நிர்வாக சார்பதிவாளர் குருசாமி, வழிகாட்டு சார்பதிவாளர் மகாராஜன், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, துணைத்தலைவர் முப்பிலியான், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். புதிய சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் அறை, கணினி  அறை, பதிவு வைப்பு அறை, மதிய உணவு அறை, இ-சான்றிதழுக்கான அறை,  மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள், அவர்களுக்கான கழிப்பறைகள், பொதுமக்கள் காத்திருப்பு அறை மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அறை, ஆண் மற்றும்  பெண்களுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளது. குடிநீர் வசதி  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: