ஏரல், டிச. 8: ஏரலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன், ஏரல் நகர செயலாளர் அசோக்குமார், வைகுண்டம் ஒன்றிய பொருளாளர் ரத்தினசாபபதி, மாவட்ட பிரதிநிதி ராஜா, மாணவரணி பொருளாளர் தினேஷ், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் நவநீதன், பாண்டி, மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.