ஏரலில் ஜெயலலிதா நினைவு தினம்

ஏரல், டிச. 8:  ஏரலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன், ஏரல் நகர செயலாளர் அசோக்குமார், வைகுண்டம் ஒன்றிய பொருளாளர் ரத்தினசாபபதி, மாவட்ட பிரதிநிதி ராஜா, மாணவரணி பொருளாளர் தினேஷ், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் நவநீதன், பாண்டி, மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: